லண்டனில் இறுதிச்சடங்கு மையத்தில் வைக்கப்பட்டிருந்த முதியவரின் உடல்... காணச் சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
*லண்டனில் இறுதிச்சடங்கு மையத்தில் வைக்கப்பட்டிருந்த முதியவரின் உடல் அழுகிப்போனது.
*குளிர்பதனப்பெட்டியில் ஏற்பட்ட பழுது காரணம் என இறுதிச்சடங்கு மையம் விளக்கம்.
முதியவர் ஒருவரின் உடல் லண்டனிலுள்ள இறுதிச்சடங்கு மையம் ஒன்றில் பாதுகாக்கப்பட்டிருந்த நிலையில், அவரைக் காணச்சென்ற உறவினர்களிடம் அவரது உடலைப் பார்க்கவேண்டாம் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Brixtonஇல் வாழ்ந்து வரும் ஜமைக்கா நாட்டவரான Zayed Martinஉடைய தாத்தாவான Uriah Pryce வயது முதிர்வு காரணமாக மரணமடந்த நிலையில், அவரது உடல் Brixtonஇல் உள்ள இறுதிச்சடங்கு மையம் ஒன்றில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறது.
ஆகத்து மாதம் 1ஆம் திகதி Uriahவின் உறவினர்களுக்கு இறுதிச்சடங்கு மையத்திலிருந்து ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது, இனி அவர்கள் தங்கள் தாத்தாவின் உடலைப் பார்க்கமுடியாது என்று அவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், ஜூலை 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை, இறுதிச்சடங்கு மைய ஊழியர்கள் மையத்தைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்கள். வார இறுதி என்பதால், சனி ஞாயிறு ஆகிய நாட்களில் யாரும் மையத்துக்குச் செல்லவில்லை. திங்கட்கிழமை காலை மையத்தைத் திறந்த ஊழியர்கள், ஒரு குளிர்பதனப்பெட்டியில் மின்சாரம் தடைபட்டுள்ளதைக் கவனித்துள்ளார்கள்.
அந்த பெட்டியில் ஏழு உடல்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், Uriahவின் உடல் உட்பட அனைத்து உடல்களும் அழுகிப்போய்விட்டன. ஆகவே, அவற்றைப் பதப்படுத்தவோ, திறந்த சவப்பெட்டியில் வைத்து இறுதிச்சடங்கு செய்யவோ முடியாது.
சொல்லப்போனால், உறவினர்கள் இறுதிச்சடங்கு மையத்திற்கு Uriahவின் உடலைப் பார்க்கக்கூட வரவேண்டாம் என இறுதிச்சடங்கு மைய ஊழியர்கள் கூறிவிட்டார்களாம்.
Image: Family handout
தனது தாத்தாவான Uriahவின் இறுதி நாட்களில் அவரை நன்றாக கவனித்துக்கொண்டிருக்கிறார் Zayed. ஆனால், அவர் இறந்த பிறகு அவரது இறுதிச்சடங்கின்போது தங்கள் மத வழக்கப்படி அவருக்கு திறந்த சவப்பெட்டியில் இறுதிச்சடங்கு செய்யவோ, இறுதி மரியாதை செய்யவோ முடியாது என்பதால் குடும்பத்தார் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கிறார் Zayed.
இதற்கிடையில், தங்கள் தரப்பு தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள இறுதிச்சடங்கு மையம், Uriah மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட ஏழு பேரின் இறுதிச்சடங்குகளையும் இலவசமாக செய்து தருவதாகக் கூறியுள்ளது.