ரோம் நகரின் தெருக்களில் வாழ்ந்துவந்த ஜேர்மானியருக்கு ஏற்பட்ட துயர முடிவு
ரோம் நகரின் தெருக்களில் வாழ்ந்துவந்த ஜேர்மானியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
1961ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த ஒருவர் ரோமின் தெருக்களில் வாழ்ந்துவந்துள்ளார். அவ்வப்போது அவருக்கு தொண்டு நிறுவனங்களும் கிறிஸ்தவ அமைப்புகளும் உதவிவந்துள்ளன.
உயிரைப் பறித்த குளிரும் மழையும்
ஆனால், துரதிர்ஷ்டவசமாக கடந்த சில நாட்களாக குளிரும் மழையுமாக இருந்ததால், வீடில்லாமல் தெருவோரம் தங்கியிருந்த அந்த நபர் மரணமடைந்துள்ளார்.
ஐரோப்பாவில் வீடில்லாததால் தெருக்களில் உறங்குவோரின் பரிதாப நிலை
ரோமில் உயிரிழந்த அந்த ஜேர்மானியருக்காகவும், உலகம் முழுவதும் வீடில்லாமல் தெருக்களில் வாழும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்ததாக போப்பாண்டவர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடில்லாத பலர், ரோமிலுள்ள புனித பீற்றர் சதுக்கத்தைச் சுற்றியுள்ள இடங்களில் இரவு நேரங்களில் தூங்குவதுண்டு.
இத்தாலியில் வீடில்லாமல் தெருக்களில் வாழ்வோரின் எண்ணிக்கை 50,700 என பொருளாதார கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜேர்மனியிலோ, வீடில்லாமல் தெருக்களில் வாழ்வோரின் எண்ணிக்கை 337,000 என கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.