பிரித்தானிய நகரமொன்றில் செல்லப்பிராணிகள் வைத்திருப்போருக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
பிரித்தானிய நகரமொன்றில், ஸ்டேப்லர் பின்கள் பதிக்கப்பட்ட ரொட்டிகள் போடப்பட்டிருப்பதால், செல்லப்பிராணிகள் வைத்திருப்போர் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Nottinghamshireஇல் Lenton Recreation Ground என்ற இடத்தில், தன் நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்ற ஒருவர் பூங்கா ஒன்றில் ஸ்டேப்லர் பின்கள் பதிக்கப்பட்ட ரொட்டிகள் கிடப்பதைக் கவனித்துள்ளார்.
உடனடியாக அவர் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த ரொட்டித்துண்டுகள் அகற்றப்பட்டுவிட்டாலும், அதேபோல் வேறு உணவுப்பொருட்கள் வீசப்பட்டிருக்கலாம் என்பதால், நாய்களை வைத்திருப்போர் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
Lenton பகுதி மக்கள் கூட்டமைப்பு ஒன்று, ட்விட்டரில், இப்பகுதியில் சில மோசமான நபர்கள் இருக்கிறார்கள். நாய்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் என்று ட்வீட் செய்துள்ளார்கள்.
இதேபோல், Basingstoke பகுதியிலும், ஒரு பிரபல பூங்கா அமைந்துள்ள பகுதியில், ஊசிகள் குத்தப்பட்ட சாசேஜ்களை மற்றொருவர் கண்டுபிடித்து அதன் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த ரொட்டியை நாய்கள் சாப்பிட்டிருந்தால், அதை விட கொடுமை எதுவுமிருந்திருக்க முடியாது. பாவப்பட்ட வாயில்லா பிராணிகளை கொடுமைப்படுத்தும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் போலும்.