உணவுப்பொருட்கள் விலைவாசி தொடர்பில் ஜேர்மன் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை
ஜேர்மனியில் உணவுப்பொருட்கள் உட்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஏற்கனவே மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
இந்நிலையில், மளிகைப்பொருட்கள் விலை மேலும் உயரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் உணவுப்பொருட்களின் விலை மேலும் உயரலாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜேர்மனியில் மளிகைப் பொருட்கள் விலை எக்கச்சக்கமாக உள்ளது. ஒரு ஆண்டுக்கு முந்தைய நிவரத்துடன் ஒப்பிட்டால் மளிகைப் பொருட்கள் விலை 16.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உணவுப்பொருட்களின் விலைகள் மேலும் உயரலாம் என தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
Photo: picture alliance/dpa | Hendrik Schmidt
உற்பத்தியாளர்கள் வாரந்தோறும் உணவுப்பொருட்களின் விலையை உயர்த்திவருவதாக சில்லறை வர்த்தக ஜாம்பவானான, Rewe நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான Lionel Souque தெரிவித்துள்ளார்.
எரிபொருட்கள் மற்றும் கச்சாப்பொருட்கள் விலை உயர்வு, மற்றும், பணியாளர்கள் ஊதியம் போன்ற விடயங்கள்தான் உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதற்குக் காரணங்களாக கூறப்படுகின்றன.
ஆனாலும், உற்பத்தியாளர்கள் விலையேற்றுவதைப் பொருத்து எல்லா பொருட்களின் விலைகளையும் நாங்கள் உயர்த்துவதில்லை என்று கூறும் Lionel Souque, இந்த விலையேற்றம் நியாயமானதுதானா என்று பார்த்துத்தான் நாங்கள் முடிவு செய்கிறோம் என்கிறார்.