ஜேர்மனியில் ஜேர்மானியர்களுக்கு வேலை கொடுக்கும் இந்திய இளம்பெண்... ஒரு சுவாரஸ்ய தகவல்
இந்தியாவிலிருந்து ஜேர்மனிக்கு வந்து ஜேர்மானியர்களுக்கே வேலை கொடுக்கிறார் ஒரு இந்திய இளம்பெண்.
ஜேர்மனி புதிதாக அறிமுகம் செய்யும் கிரீன் கார்டு குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அவர்.
இன்று தனது சொந்த ஜேர்மன் நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரியாக இருக்கிறார் சௌம்யா.
Foviatech என்னும் அவரது நிறுவனம், போக்குவரத்தையும் சுகாதார சேவைகளையும் ஒழுங்கு செய்யும் சாஃப்ட்வேரை உருவாக்குகிறது.
ஜேர்மனியில் திறன்மிகு பணியாளர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் நிலையில், அதை சமாளிக்க கிரீன் கார்டு ஒன்றை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது அந்நாடு. அதனால், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத வெளிநாட்டவர்கள் ஜேர்மனிக்கு வந்து பணி செய்வது எளிதாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புள்ளிகள் அடிப்படையிலான புதிய திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சௌம்யா, ஜேர்மனியில் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், இப்போதைக்கு இந்த திட்டம் வெளிநாட்டவர்கள் ஜேர்மனிக்கு வந்து பணி செய்ய ஒரு நல்ல வாய்ப்பாக அமையக்கூடும் என்கிறார்.
தற்போது தான் தனது நிறுவனத்தில் ஜேர்மானியர்களுக்கும் தகவல் தொடர்புத்துறையினருக்கும் பணி வழங்க முன்னுரிமை கொடுத்து வருவதாக தெரிவிக்கும் சௌம்யா, வெளிநாட்டவர்களுக்கு பணி வழங்குவதற்கான ஜேர்மானிய விதிமுறைகள் கடினமாக இருப்பதாலேயே தற்போதைக்கு தான் அவ்வாறு செய்து வருவதாக தெரிவிக்கிறார்.
image: Sowmya Thyagarajan