ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் தேசிய அணிக்கு வருகிறாரா? வெளிவந்த உறுதியான தகவல்
ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் வந்து சொந்த நாட்டு அணிக்காக விளையாடமாட்டார் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ்கடந்த 2018ம் ஆண்டு திடீரென சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
114 டெஸ்ட் போட்டிகளில் 8765 ரன்கள், 228 ஒருநாள் போட்டிகளில் 9,577 ரன்கள், 78 டி20 போட்டிகளில் 1672 ரன்கள் என சாதனைக்கு அருகே சென்ற நிலையில் டிவில்லியர்ஸ் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்சியில் ஆழ்த்தியது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து பல நாட்டு கிரிக்கெட் லீக் போட்டிகளில் டிவில்லியர்ஸ் விளையாடி வந்தார்.
குறிப்பாக ஐபிஎல் டி20 தொடரில் டிவில்லியர்ஸ் ஃபார்ம் ஒவ்வொரு தொடருக்கும் மெருகேறியது.
இந்நிலையில் கடந்த மாதம் டிவில்லியர்ஸ் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நான் மீண்டும் விளையாடினால் மிகப்பிரமாதமாக இருக்கும். எனக்கு இடம் கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதனால், தென் ஆப்பிரி்க்கஅணிக்குள் மீண்டும் டி வில்லியர்ஸ் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று ஓர் அறிவிப்பு வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது சர்வதேச அணிக்குள் ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் வருவது குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினோம்.
அந்த ஆலோசனையின் முடிவில், தான் ஓய்வு பெற்றுவிட்டது என்பது இறுதியான முடிவு. அதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை.
மீண்டும் தேசிய அணிக்கு வரும் எண்ணமில்லை என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.