இனவெறி தாக்குதலால் இங்கிலாந்து கால்பந்து வீரர் எழுதிய கடிதம்! அதற்கு நச் என ஒற்றை வார்த்தையால் கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் எழுதிய பதிவு
இங்கிலாந்து கால்பந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்ட் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து அவர் மனம் திறந்து ஒரு பதிவை வெளியிட்ட நிலையில் அதற்கு ஆதரவாக ஒற்றை வார்த்தையில் ஏபி டி வில்லியர்ஸ் ஒரு பதிவை எழுதியுள்ளார்.
யூரோ கால்பந்து இறுதி போட்டியில் இங்கிலாந்து, இத்தாலி அணிகள் நேற்று முன் தினம் மோதின. பரபரப்பான ஆட்டத்தில், பெனால்டி ஷூட் அவுட் முறைப்படி இத்தாலி அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.
மார்கஸ் ராஷ்போர்ட், ஜடோன் சாஞ்சோ, புக்காயோ சாகா ஆகிய மூன்று இங்கிலாந்து வீரர்கள் பெனால்டி ஷூட் அவுட்டின்போது கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இந்த வீரர்களை விமர்சிக்கும் விதமாக, ரசிகர்கள் சிலர் சமூகவலைதளங்களில் இனவெறி கருத்துகளை தெரிவித்தனர்.
Respect!
— AB de Villiers (@ABdeVilliers17) July 12, 2021
இதையடுத்து இனவெறி தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் வீரர் மார்கஸ் ராஷ்போர்ட் ஒரு உணர்ச்சிபூர்வமான கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், இறுதிப் போட்டியில் வெற்றியை தவறவிட்ட பிறகும், இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் தனக்கு ஆதரவு அளித்து வரும் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
நான் மார்கஸ் ராஷ்போர்டு தெற்கு மான்செஸ்டரின் விடிங்டன் மற்றும் வைதன்ஷேவைச் சேர்ந்த கருப்பு மனிதன். என்னிடம் வேறு எதுவும் இல்லை என்றாலும் இந்த அடையாளம் என்னிடம் உள்ளது என உருக்கமாக பதிவிட்டார்.
இதை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் மார்கஸ் ராஷ்போர்டு டுவிட்டர் பதிவு கடிதத்துக்கு கீழே ”Respect!” (மரியாதை) என பதிவிட்டுள்ளார்.