இங்கிலாந்தில் பட்டப்பகலில் கடத்திச் செல்லப்பட்ட புகலிடகோரிக்கையாளர் சிறுவர்கள்: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
இங்கிலாந்தில், உள்துறைச் செயலகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹொட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர் சிறுவர்கள் மூவர் கடத்திச் செல்லப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டப்பகலில் கடத்தப்பட்ட சிறுவர்கள்
இங்கிலாந்திலுள்ள பிரைட்டன் என்ற இடத்தில், உள்துறைச் செயலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொட்டல் ஒன்றில் புகலிடக்கோரிக்கையாளர் சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
அதாவது, பெற்றோர் இல்லாமல் தனியாக வந்த சிறுவர்கள் அவர்கள்.
கடந்த மே மாதம், அந்த ஹொட்டலின் முன்பு கார் ஒன்று வந்து நின்றதையும், மூன்று பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு கார் அக்கிருந்து விரைந்ததையும் கவனித்த ஒருவர், அந்தக் காரின் நம்பர் பிளேட்டிலிருந்த எண்ணைக் கவனித்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
Photograph: Andy Hall/the Observer
நடைமுறைச் சிக்கல்கள்
பிரச்சினை என்னவென்றால், நடைமுறையில், சினிமாக்களில் வருவதுபோல, உடனே சைரனை ஒலித்துக்கொண்டு அந்தக் காரை துரத்திச் சென்றெல்லாம் பிடிக்கமுடியாது. அதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளன.
ஆகவே, சாதாரண கார்களில் அந்தக் கடத்தல்காரர்களின் காரைப் பின்தொடர்ந்துள்ளனர் பொலிசார். எப்படி கடத்தல்காரர்களைப் பிடிப்பது என பல்வேறு திட்டங்கள் தீட்டிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, ஏன், அதிர்ஷ்டவசமாக என்று கூட சொல்லலாம், போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது அந்தக் கார்.
உடனடியாக அந்தக் காரை சுற்றி வளைத்த பொலிசார், அந்த மூன்று பிள்ளைகளையும் மீட்டதுடன், காரிலிருந்த கடத்தல்காரர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இன்னமும் அந்த வழக்கு தொடர்கிறது.
உண்மை என்னவென்றால், அதிர்ஷ்டவசமாக இந்தப் பிள்ளைகள் காப்பாற்றப்பட்டுவிட்டார்கள். ஆனால், இதுபோல கடத்தல்காரர்களிடம் சிக்கும் பிள்ளைகள், பொலிசார் மீதான பயத்தால் பொலிசாருக்கு தகவலளிப்பது இல்லையாம். ஆக, இப்படி பெற்றோர் இல்லாமல் தனியாக வரும் புகலிடக்கோரிக்கையாளர் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு அபாயம் நிலவுகிறது.