49 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்
மேற்கிந்திய தீவுகளில் டெஸ்டில் 160 ஓட்டங்கள் விளாசி பாகிஸ்தானின் அப்துல்லா ஷாஃபிக் சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தானின் அப்துல்லா ஷாஃபிக் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 160 ஓட்டங்கள் குவித்து, 49 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்துள்ளார்.
கடைசி டெஸ்ட் போட்டி
மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ட்ரினிடாட்டில் நடந்து வருகிறது.
மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸில் 344 ஓட்டங்கள் குவிக்க, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 387 ஓட்டங்கள் குவித்தது.
அணித்தலைவர் பாபர் அஸாம் (Babar Azam) 88 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அப்துல்லா ஷாஃபிக் ஆட்டமிழக்காமல் 160 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள்) எடுத்தார்.
அப்துல்லா ஷாஃபிக்
இதன்மூலம் 49 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் இன்னிங்ஸில் 150 ஓட்டங்களை கடந்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

1977ஆம் ஆண்டில் மஜீத் கான் மேற்கிந்திய தீவுகளின் கயானாவில் 167 ஓட்டங்கள் குவித்திருந்தார்.
1958யில் ஹனீப் மொஹம்மது (பாகிஸ்தான்) 337 ஓட்டங்கள் குவித்ததே இதுவரை அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக உள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |