டெல்டா மாறுபாடு பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்! அமெரிக்க சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை
உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் டெல்டா மாறுபாடு ஆயிரம் மடங்கு ஆபத்தானது என்று அமெரிக்க சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா இன்று வரை ஒழிந்த பாடில்லை. முதலாவது அலையை விட இரண்டாவது அலை கொடூரமாக பரவி வருகிறது.
இன்னும் கொரோனா இரண்டாவது அலையே முடியாத நிலையில் அதற்குள் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த அரசுகள் தேவையான நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர்.
மக்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க மூன்று தடுப்பூசிகள் மும்முரமாக செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்க சுகாதாரத்துறை, சாதாரண கொரோனா வைரஸை விட டெல்டா மாறுபாடு ஆயிரம் மடங்கு ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தடுப்பூசி 90% பாதுகாப்பு கொடுத்தாலும் தொற்று பரவுவதை தடுப்பூசிகளால் தடுக்க முடியாது. மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.