அபுதாபி ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் பலி!
அபுதாபியில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில், ஏமம் நாட்டில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி (Houthi) என்ற அமைப்பு ட்ரோன் மூலம் அடுத்தடுத்துத் தாக்குதல் நடத்தினர்.
இந்த பயங்கர சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அந்த மூவரில் இருவர் இந்தியர்கள் எனவும், ஒருவர் பாகிஸ்தானியர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அபுதாபி விமான நிலையம் அருகே உள்ள முசாஃபா பகுதியில் செயல்பட்டு வரும் எண்ணெய் நிறுவனமான ADNOC-ல் இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 3 ஆயில் டாங்கர்கள் தீப்பற்றி வெடித்துச் சிதறின.
ஆரம்பத்தில் இது ஒரு விபத்து என்று நினைக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகளின் ஆரம்பக்கட்ட விசாரணையில் ட்ரோன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இது திட்டமிட்ட தாக்குதல் என்பது தெரியவந்தது.
பின்னர், சில நிமிடங்களில் ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்பான ஹவுத்தி இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
Developing: Suspected drone attack by Iranian-backed Houthi rebels on oil tankers near UAE’s Abu Dhabi airport, and on the site of Abu Dhabi airport expansion, has resulted in multiple explosions and at least three fatalities. #AbuDhabi pic.twitter.com/sUXHxNHJzE
— Alex Macheras (@AlexInAir) January 17, 2022