பதவி தேடி வந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வேன் - தினேஷ் கார்த்திக்
கொரோனா பரவலால் இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது.
இதற்கமைய வரும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் வழங்கிய பேட்டியொன்றில் “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் பதவி தேடி வந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வேன்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து இவர் மேலும் கூறுவதாவது, “பாட் கம்மின்ஸ் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க மாட்டார்...அதேபோல் கேப்டன் இயான் மோர்கன் பங்கேற்பதும் உறுதியாகவில்லை.
எனக்கு கேப்டன் பதவி தேடி வந்தால், நிச்சயம் ஏற்றுக்கொள்வேன்.. டி20 உலகக்கோப்பை தொடரில் என்னால் பெஸ்ட் பினிஷராக செயல்பட முடியும்.
இந்திய டி20 அணியின் மிடில் வரிசையில் வெற்றிடம் உள்ளது. இதனை என்னால் நிரப்ப முடியும். மேலும் இப்போதுள்ள இந்திய அணிக்கு தேர்வாக வயது முக்கியமல்ல, உடற்தகுதியே பிரதானம். இன்னும் இந்திய அணிக்காக விளையாட நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்" என்றார் தெரிவித்துள்ளார்.