கண்ணெதிரே துடிதுடித்து இறந்த குழந்தைகள்., குற்ற உணர்ச்சியில் தம்பதி எடுத்த முடிவு.. கடைசி நேரத்தில் கணவன் செய்த செயல்!
தமிழகத்தை சேர்ந்த பெண், ஒரே நாளில் 2 குழந்தைகளையும், கணவனையும் கொடூரமாக இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாவட்டம் திருப்பத்தூரில், ஆம்பூரை அடுத்த கதம்பூர் கைலாசகிரி பகுதியில் வசித்து வருபவர் லோகேஸ்வரன் (34). அவரது மனைவி மீனாட்சி (30).
இவர்களுக்கு 8 வயதில் ஜஸ்வந்த் என்கிற மகனும், 6 வயதில் ஹரிபிரித்தா என்கிற மகளும் இருந்தனர். இருவரும் 4-வது மற்றும் 2-ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விடுமுறை நாள் என்பதால் குடும்பத்துடன் அருகில் உள்ள மலைப்பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர். வழக்கமாக வரும் இடம் என்பதால் லோகேஸ்வரன் தம்பதி உணவருந்திவிட்டு அங்கிருந்த பாறையின் மீது அமர்ந்து ஓய்வு எடுத்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
இரு குழந்தைகளும் அங்குள்ள குளத்தில் மீன் பிடித்துகொண்டு விளையாடி கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென ஹரி பிரீத்தா நீரில் மூழ்கியுள்ளார்.
இதைப்பார்த்து கூச்சலிட்ட அண்ணன் ஜஸ்வந்த் தங்கையைக் காப்பாற்ற குளத்தில் குதித்துள்ளார். நீச்சல் தெரியாததால் இருவரும் இருவரும் குளத்தில் மூழ்கியுள்ளனர்.
சத்தம் கேட்டு ஓடி வந்த தந்தை லோகேஸ்வரன் குளத்தில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் நீரில் மூழ்கிவிட்டனர். அவர்களை லோகேஸ்வரனால் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. கரையில் நின்ற பெற்றோர் இருவரும் கதறி அழுதுள்ளனர்.
உடனடியாக உமராபாத் காவல்துறை மற்றும் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் குளத்தில் மூழ்கிய இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டு சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு ஜஸ்வந்த் மற்றும் ஹரி ப்ரீத்தா இருவர் உயிரற்ற உடலை மீட்டனர்.
பிணமான குழந்தைகளைக்கண்டு பெற்றோர் லோகேஸ்வரன், மீனாட்சி இருவரும் கதறி அழுதனர். பின்னர் 2 பேர் சடலமும் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தந்தை லோகேஸ்வரன் மற்றும் தாய் மீனாட்சி இருவரும் குழந்தைகளை தாங்களே கூட்டிச் சென்று கொன்றுவிட்டோமே என்று குற்ற உணர்ச்சியில், தற்கொலை முடிவுவுக்கு வந்துள்ளனர்.
குளிர்பானம் ஒன்றை வாங்கி தாங்கள் வைத்திருந்த விஷத்தை அதில் கலந்து, முதலில் லோகேஸ்வரன் குடித்துவிட்டு மீதமுள்ள விஷம் கலந்த குளிர்பானத்தை மனைவி மீனாட்சியிடம் கொடுத்துள்ளார். அப்போது மீனாட்சி குடிக்க முயன்ற போது அந்த பாட்டிலை திடீரென லோகேஸ்வரன் தட்டி விட்டுள்ளார்.
அப்போது மனைவி மீனாட்சி கதறி அழுதுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்த ரயில் பயணிகள் லோகேஸ்வரனை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று சேர்த்தனர்.
லோகேஸ்வரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் யோகேஸ்வரன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைப்பார்த்து அவரது மனைவி மீனாட்சி அலறிதுடித்து மயங்கி விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீனாட்சி சிகிச்சைக்காக வேலூர் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரே நாளில், இரண்டு குழைந்தைகள் மற்றும் கணவன் இறந்து, குடும்பமே சிதைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது.