எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறினாரா அஜித்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம், உடல்நலக்குறைவால் கடந்த 26-ம் தேதி காலமானார்.
அவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். மேலும் பலர் அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரை தமிழ்நாடு எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.
இதன்போது அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் திரையுலகோர் அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.