விமான விபத்து குறித்து முன்னாள் மனைவிக்காக பதிவிட்ட தமிழ்ப்பட நடிகர்
நடிகர் பாலா ஏர் இந்தியா விமான விபத்தை குறிப்பிட்டு தனது முன்னாள் மனைவிக்காக பிரார்த்திப்பதாக பதிவிட்டது இணையத்தில் பரவியது.
ஏர் இந்தியா விமான விபத்து
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் இதுவரை 279 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நிகழ்ந்த மருத்துவக் கல்லூரியில் பயின்று வருபவர் எலிசபெத் உதயன். இவர் நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி ஆவார்.
இவரை குறிப்பிட்டு நடிகர் பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "அகமதாபாத் விமான விபத்து அதிர்ச்சி அளிக்கிறது. நம்மை நாமே எப்படி ஆறுதல்படுத்திக் கொள்வது என்று தெரியவில்லை. எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மருத்துவர் எலிசபெத், உங்களுடன் எனது பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும். பாதுகாப்பாக இருங்கள். கடவுளின் ஆசீர்வாதத்தை நாடுங்கள்" என தெரிவித்திருந்தார்.
தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்
எனினும், முன்னதாக எலிசபெத் தனது பேஸ்புக் பதிவில், விமான விபத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்கிறேன்.
எங்கள் கல்லூரியில் நடந்த விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள். நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.
அத்துடன் தங்கள் சக மற்றும் மருத்துவ மாணவர்கள் பலர் இறந்துவிட்டனர் என்றும், பலர் காயமடைந்து இருப்பதால் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |