கண்ணீர் விட்டு அழுத நடிகர் மயில்சாமியின் பரிதாப நிலை! டெபாசிட் கூட பெறலையேப்பா
தமிழகத்தின் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மயில்சாமி டெபாட்சி கூட பெறாமல் தோல்வியடைந்திருப்பது தமிழ் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று தமிழகத்தில் சட்ட பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று, தமிழகத்தி ஆட்சியமைக்கிறது.
இந்நிலையில், இந்த தேர்தலில், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் மயில்சாமி சுயேச்சையாக போட்டியிட்டார். இதே தொகுதியில்தான் மக்கள் நீதி மய்யம் சினேகனும் போட்டியிட்டார்.
மயில்சாமி ஏழு சுற்றுகள் முடிவின்போது வெறும் 886 வாக்குகளையே பெற்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, அவர் ஏராளமான யுத்திகள கையாண்ட போதும், மக்களை அதை ரசிக்க செய்தனரே தவிர, ஓட்டு போட விரும்பவில்லை.
தேர்தல் முடிவுக்கு முன், சுயேச்சையாக ஏன் போட்டியிடுகிறேன் என்பது குறித்து ஒரு திரைப்பட விழாவில் பேசிய போது, நான் சுயேச்சையா நிக்கிறதுக்கு முக்கிய காரணமே டெல்லியில் போராடும் விவசாயிகள்தான். மனசு தாங்கவில்லை, 100 நாளைக்கு மேல போராட்டம் நடக்கிறது.
யாருமே போய் பேசவில்லை. இதற்கான எதிர்ப்பை எப்படி காட்டுவது என்பது தெரியவில்லை, அதன் காரணமாகவே சுயட்சையாக நிற்கிறேன்.
எனக்கு எம்எல்ஏ ஆசையெல்லாம் அப்பறம், ஆனால், எனக்கு எத்தனை ஓட்டு வருதோ தெரியாது. ஆனால், வரும் ஓட்டுக்கள் எல்லாமே மத்திய, மாநில அரசுக்கான எதிர்ப்பு ஓட்டுக்கள் அது மட்டும் தெரியும் என்று சொல்லும்போதே கண்ணீர் விட்டு அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.