கூட்டு வன்புணர்வு.. முகத்தை சிதைத்து அநியாயம்! கொந்தளித்த பிரபல நடிகர்
ராமேஸ்வரம் அருகே மீனவப் பெண் கூட்டு வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
வடகாடு எனும் கிராமத்தைச் சேர்ந்த மீனவ பெண், சிலரால் கூட்டு வன்புணர்வு செய்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'கடல்பாசி எடுக்க சென்ற ஒரு பெண்ணை 6 அல்லது 7 பேர் கொண்ட கும்பல் வன்புணர்வு செய்து, முகத்தை சிதைத்து இவ்வளவு அநியாயம் பண்ணிருக்கிறார்கள்.
ஏதோ ஒரு ஆலையில் வேலை செய்யக்கூடிய வடநாட்டை சேர்ந்த இளைஞர்கள் என்று அங்கு இருப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவர்களா அல்லது யார் என்பது விசாரணையில் தான் தெரிய வரும். அவர்களை கண்டுபிடித்து உச்சபட்சமான தண்டனை வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.