ஓலை குடிசையில் வாழ்ந்தார்! பிரபல தமிழ் திரைப்பட நடிகர் காலமானார்
பிரபல திரைப்பட நடிகரும் தெருக்கூத்துக்கலைஞருமான நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.
நெல்லை தங்கராஜ்
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமான தெருக்கூத்துக்கலைஞர் நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஓலை குடிசையில் வாழ்ந்தார்
குடியிருக்க வீடு இல்லாமல் ஓலை குடிசையில் வசித்து வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டது.
பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனின் தந்தையாக அறிமுகமான அவர் பெண் தெருக்கூத்து கலைஞராக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.