நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அடித்த அதிர்ஷ்டம்! வாழ்வில் ஏற்படப்போகும் திருப்புமுனை
நடிகர் பிரகாஷ்ராஜ் ராஜ்யசபா எம்.பி ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானாவில் 2 எம்.பி பதவிகள் காலியாகும் நிலையில், டி.ஆர்.எஸ் கட்சியின் சார்பாக அவர் எம்.பி ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ். வில்லன், ஹீரோ, இயக்கம், தயாரிப்பு என பன்முகம் காட்டி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் சார்ந்த கருத்துக்களை முன் வைத்து வருகிறார்.
குறிப்பாக பாஜக அரசை அதிகம் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏழு ராஜ்யசபா எம்.பி., பதவிகளும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்யும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வசமே உள்ளன.
ராஜ்ய சபாவில் எம்.பி.,க்களாக இருக்கும் வோடிடெலா லட்சுமிகாந்த ராவ் மற்றும் தருமபுரி நிவாஸ் ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 21ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
காலியாகும் இந்த இரண்டு எம்.பி., பதவிக்கான தேர்தல் ஜூன் 10ல் நடக்கிறது. இந்தச்சூழலில் நடிகர் பிரகாஷ் ராஜ், சமீபத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவை சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, பிரகாஷ் ராஜுக்கு ராஜ்யசபா 'சீட்' வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகிஉள்ளது. ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிரகாஷ் ராஜை சந்திர சேகர் ராவ் டெல்லிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது அவர் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.