40 வயதிலேயே எனக்கான கல்லறையை கட்டிக்கொண்டேன்: நடிகர் ராஜேஷ் பேசிய வீடியோ
கார்ல் மார்க்ஸ் கல்லறையை போலவே தனக்கும் கல்லறையை வடிவமைத்ததாக, நடிகர் ராஜேஷ் முன்னர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தானே கட்டிக்கொண்டதாக கல்லறை
தமிழில் பிரபலமான நடிகரான ராஜேஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு திரையுலகினர், ரசிகர்கள் என பலரையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு முன்னர் அளித்த நேர்காணலில், 40 வயதிலேயே தனக்கான கல்லறையை தானே கட்டிக்கொண்டதாக ராஜேஷ் கூறியிருக்கிறார்.
This video will leave you stunned!
— Sun TV (@SunTV) May 29, 2025
Throwback to the legendary Actor Rajesh on Vanakkam Tamizha.#SunTV #SunTVThrowback #ActorRajesh pic.twitter.com/I9QnZAuq9k
மேலும் அவர் அந்த நேர்காணலில், "கார்ல் மார்க்ஸ் கல்லறையை புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்து, அப்படியே எனக்கு கல்லறை செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
அதனைப் பார்த்து விட்டு வந்த 6 மாதத்தில் என் தாய் இறந்துவிட்டார். மேலே ஆட்களை வைத்துக் கொண்டே இருக்கலாம்; அதுபோன்ற கல்லறையை கட்டி என் அம்மாவை அடக்கம் செய்தேன்.
பின்னர் என் அப்பா, அடுத்து என் மனைவி இறந்தாங்க. மார்பிளில் கட்டிய அந்த கல்லறை 25 வருடங்கள் ஆகிவிட்டதால் உடைந்துவிட்டது.
மறுபடியும் கிரானைட் வைத்து கட்டி, எனக்கும் இடம் விட்டு என்னுடைய 40வது வயதிலேயே எனக்கு நான் கல்லறை கட்டிவிட்டேன்.
எப்போது ஒருவன் அவனுக்கு அவனே கல்லறை கட்டுகிறானோ, அவன் நூறு வயதுவரை வாழ்வான் என்று சீன பழமொழி ஒன்று கூறுகிறது.
ஆனால், அதற்காக நான் கல்லறையை கட்டவில்லை. எனக்கு இஷ்டப்பட்ட, இந்த கல்லறையில்தான் நான் போய் இருக்கப்போகிறேன் என்று வடிவமைத்து, அதில் என்ன வாசகம் எழுத வேண்டும் என்பது வரை திட்டமிட்டுள்ளேன்" என பேசியிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |