முதல்வரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்! எவ்வளவு?
நடிகர் ரஜினிகாந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கினார்.
13-05-2021 அன்று கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வேண்டுகோள் விடுத்து, ‘உலகத் தமிழர்களே! உயிர்காக்க நிதி வழங்குவீர்’! என்ற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் காணொலி வெளியிட்டார்.
நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் சூர்யா மற்றும் கார்த்திக் ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து ரூ.1 கோடி நிதிக்கான காசோலையை வழங்கினர்.
நடிகர் அஜித், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கினர்.
நடிகர் ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார். இதனை தொடர்ந்து பலரும் தமிழக அரசுக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.
அந்ந வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசிற்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் அளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கிய பின் தலைமைச் செயலகத்தில் பேட்டியித்த ரஜினிகாந்த், கொரோனாவை வெல்ல அரசு கூறும் வழிமுறைகளை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.