ஆணவக்கொலை வன்முறை அல்ல, அக்கறைதான் - சர்ச்சையை கிளப்பிய தமிழ் நடிகர்
நடிகர் ரஞ்சித் ஆணவக்கொலையை அக்கறை என்று கூறியது சர்ச்சையாகியுள்ளது.
தமிழில் மறுமலர்ச்சி, பாண்டவர்பூமி, பீஷ்மர், பசுபதி ராசக்காபாளையம், உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரஞ்சித்.
சில கால இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் வலம் வந்த நடிகர் ரஞ்சித் தற்போது 'கவுண்டம்பாளையம்' எனும் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் சேலத்தில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது ஆணவக்கொலை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஞ்சித், "ஆணவக்கொலை என்பது உணர்ச்சி தான். நான் என்னுடைய படத்திலும் இதற்கு தீர்வு கூறியிருக்கிறேன். நேரடியாக ஒரு காதல் நடக்கும்போது பெற்றோர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கு தான் அதன் வலி தெரியும். ஒருவரின் பைக்கோ அல்லது செல்போனோ திருடு போனால், திருடியவரை ஆத்திரத்தில் அடிப்பதில்லையா? அதுபோல் தான் இதுவும்.
பெற்றோரின் கோபம் ஒரு அக்கறையில் வருவது தான். ஆணவப்படுகொலை ஒரு வன்முறையோ, கலவரமோ அல்ல. எது நடந்தாலும் அது அக்கறையின் காரணமாக நடப்பவைதான்" என்றார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவியத்தைத் தொடர்ந்து, பலரும் தங்கள் கண்டனத்தை ரஞ்சித்துக்கு தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |