பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை வில்லன் நடிகர் காலமானார்!
பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் ரிசாபவா தனது 55வது வயதில் காலமானார்.
மலையாள சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்துள்ள ரிசாபவா தமிழிலும் காசு, தென்றல் வரும் தெரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள் மட்டுமின்றி பல தொலைக்காட்சி தொடர்களிலும் ரிசாபவா நடித்துள்ளார்.
நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள அவர் சில காலமாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
90களில் வில்லன் வேடங்களில் வெள்ளித்திரையில் கலக்கிய ரிசாபவாவின் மரணத்திற்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.