தமிழ் நடிகர் வீட்டில் கொள்ளை போன 250 சவரன் நகை! பிடிபட்ட மூன்று பேர்
சென்னையில் நடிகர் ஆர்.கே வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
250 சவரன் நகை
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள நடிகர் ஆர்.கே-வின் வீட்டில் ஒரு வாரத்திற்கு முன் மர்ம நபர்கள் சிலர் கொள்ளை அடித்தனர்.
வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், ஆர்.கே-வின் மனைவியை மிரட்டி 250 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிசிடியில் ஆராய்ந்தபோது, கொள்ளையடித்த நபர்களில் ஒருவர் ஆர்.கே வீட்டில் பணியாளராக இருந்த ரமேஷ் என்பது தெரிய வந்தது.
சிக்கிய கொள்ளையர்கள்
இந்த நிலையில், பொலிஸாரின் தீவிர வேட்டையில் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான கிருஷ்ணா, கரண் ஆகிய மூன்று பேர் சிக்கியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 150 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.