பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் குடும்பத்தோடு மருத்துவமனையில் அனுமதி
பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் அவர் குடும்பத்தார் கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த நடிகர் செந்தில், நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், கொரோனா அறிகுறிகள் இருந்ததின் பேரில் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனைவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.