நடிகை சாந்தினியுடன் குடும்பம் நடத்தியது உண்மையா? சிக்கிய முக்கிய ஆதாரம்: விரைவில் கைதாகும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
தமிழகத்தின் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி புகார் கொடுத்திருக்கும் நிலையில், அவருக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றனர்.
சசி நடிக்ப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சாந்தினி(36). கடந்த 28-ஆம் திகதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதுபாலியல் புகார் அளித்தார்.
அந்த புகாரில், நான் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சுற்றுலா வளர்ச்சித்துறை சம்பந்தமாக சந்தித்தேன். அப்போது, அவருக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டதாகவும், என்னை சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தார்.
அதன் பின் இருவரும் சென்னையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் திருமணம் செய்யாமலே ஒன்றாக வசித்து வந்தோம், அவர் சென்னை வரும் போதெல்லாம் என்னுடன் தான் இருப்பா, நானும் அவரும் பல இடங்களுக்கு சென்றுள்ளோம்.
இதன் காரணமாக, நான் மூன்று கர்ப்பமானேன், ஆனால், அவரோ திருமணத்திற்கு பின் குழந்தை பெற்றுகொள்வோம். இப்போது வேண்டாம் என்று என்னை மூளை சலவை செய்து கலைக்க வைத்துவிட்டார்.
இது அவரது நண்பரான டாக்டர் அருணின் கோபாலபுரம் மருத்துவமனையில் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், மணிகண்டனோ இது எல்லாம் உண்மையில்லை என்று மறுத்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ததால், அவரை 9-ஆம் திகதி வரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதனால், பொலிசார் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை தேட ஆரம்பித்தனர். அதில் மணிகண்டன் அடிக்கடி நடிகையை பார்க்க வீட்டிற்கு வந்து சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.
மேலும், அடுக்கமாடி குடியிருப்பில் உள்ள செக்யூரிட்டிகளிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், மணிகண்டன் நடிகை சாந்தினியுடன் ஒன்றாக குடும்பம் நடத்தியதை உறுதிபடுத்தினர். நடிகை 3 முறை கருகலைப்பு செய்ததாக கூறப்படும் கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொலிசார் விசாரணை நடத்தினர்.
அதில், மருத்துவர் அருண் என்பவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கேட்டு கொண்டதற்கு இணங்க நடிகைக்கு மூன்று முறை கருகலைப்பு செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும், சாந்தினி, மணிகண்டன் இருக்கும் புகைப்படங்களை ஆராய்ந்த பொலிசார் அது எல்லாம் உண்மை தான் என்பதை உறுதி செய்துள்ளனர். விசாரணையின் அடுத்த கட்ட நகர்வாக, நடிகை சாந்தினி அளித்த புகாரின் படி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உதவியாளர்களான கவுரிநாதன், பாண்டி மற்றும் கார் டிரைவர் ராம்குமார், பாதுகாவலர் மணி ஆகியோரிடம் விசாரணை நடத்த பொலிசார் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி இந்த நான்கு பேருக்கும் பொலிசார் இன்று காலை 11 மணிக்கு அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பட்டுள்ளது. நடிகை வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் சம்மன் அனுப்பட்டுள்ள 4 பேரும் மணிகண்டனுடன் இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனால் இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படியும், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்தும் வரும் 9-ஆம் திகதிக்கு பிறகு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்படலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.