ரூ. 4 லட்சம் பணப்பரிமாற்றம்.., போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்திடம் கைது
நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் தகராறு ஏற்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரசாந்திடமிருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெளியான தகவலின் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் தனிப்படை பொலிஸார் விசாரணை நடத்தினர். ரத்த மாதிரிகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சென்னையில் உள்ள கிளப் மற்றும் பார்ட்டிகளில் இந்த கோக்கைன் போதை பொருளை ஸ்ரீகாந்த் பயன்படுத்தி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்திடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
ரத்த மாதிரி பரிசோதனையில் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருளை கிராம் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரத்துக்கு வாங்கி உள்ளதாகவும், மேலும், அவர் 40 முறை போதைப்பொருள் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜிபே மூலம் ரூ.4.72 லட்சம் கொடுத்து போதைப்பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் வாங்கியுள்ளார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |