போதைப்பொருள் கொடுத்து வன்புணர்வு.. நடிகர் மீது புகார் அளித்த இளம் நடிகைக்கு மிரட்டல்!
கேரளாவில் தன்னை வன்புணர்வு செய்ததாக மலையாள நடிகை ஒருவர் புகார் அளித்த நிலையில், அவருக்கு புகாரை திரும்ப பெறுமாறு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு தன்னை ஒன்றரை மாதங்களாக வன்புணர்வு செய்ததாக, கடந்த மாதம் 22ஆம் திகதி இளம் நடிகை ஒருவர் அதிர்ச்சி புகார் அளித்திருந்தார். இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அறிந்த நடிகர் விஜய் பாபு துபாய்க்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரை நேரில் ஆஜர் ஆகுமாறு பொலிசார் சம்மன் அனுப்பியபோது, தனக்கு 19ஆம் திகதி வரை அவகாசம் வேண்டும் என பதில் அனுப்பினார்.
எனினும், அவரது பதிலை ஏற்க மறுத்த பொலிசார், சர்வதேச பொலிசாரின் உதவியுடன் விஜய் பாபுவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தன் மீது அளித்த வன்புணர்வு புகாரை திரும்பப் பெறுமாறு குறித்த நடிகைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாகவும் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வெளிநாடுகளில் உள்ள சிலர் விஜய் பாபுவின் மூலம் தங்களது கருப்பு பணத்தை சினிமாவில் முதலீடு செய்துள்ளனரா என பொருளாதார குற்றப்பிரிவு பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022