நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த நீதிமன்றம்! காரணம் என்ன?
வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ 1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் பிரித்தானியாவில் இருந்து சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸை கடந்த 2012ல் இறக்குமதி செய்தார்.
ஆனால் இதற்கு நுழைவு வரி செலுத்தாமல் அதற்கு விலக்கு கேட்டு விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கேட்டு நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல, நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு என தெரிவித்துள்ள நீதிமன்றம் அபராத தொகையை விஜய் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.