நடிகர் விவேக்கின் மரணத்திற்கு இது தான் காரணம்! உறுதிப்படுத்திய ஒன்றிய அரசின் குழு
நடிகர் விவேக்கின் மரணத்திற்க்கான காரணத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவு கண்டறிந்துள்ளது.
நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரண்டு நாட்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் விவேக் மரணத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் தடுப்பூசி மீதான சந்தேகம் அதிகரித்தால் பலர் தடுப்பூசி போட தயக்கம் காட்டினர்.
தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும், நடிகர் விவேக் உயிரிழந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என சுகாதாரத்துறை திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், விவேக்கின் மரணத்திற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய அரசின் AEFI குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
AEFI குழு வெளியிட்ட அறிக்கையில், விவேக்கின் மரணம் தற்செயலானது என்றும், அவர் ஏப்ரல் 15, 2021 அன்று எடுத்த கோவாக்ஸின் டோஸ் உடன் தொடர்புடையது அல்ல என்றும் கூறியுள்ளது.
மேலும், உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே நடிகர் விவேக் உயிரிழந்தார் என ஒன்றிய அரசின் AEFI குழு குறிப்பிட்டுள்ளது.
இச்செய்தியால் விவேக் மரணத்தை தொடர்ந்து மக்களிடையே தடுப்பூசி மீது ஏற்பட்ட சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.