30 வயதில் மரணமடைந்த நடிகை: பின்னணியில் ஒரு எச்சரிக்கை செய்தி
இங்கிலாந்தில், கால் வலி என மருத்துவமனைக்குச் சென்ற ஒரு இளம்பெண், முன்று வாரங்களில் உயிரிழந்ததைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கால் வலி என மருத்துவமனைக்குச் சென்ற இளம்பெண்
பாடகியும் நடிகையுமான எமிலி (Emily Chesterton, 30) என்னும் இளம்பெண், தனது காலிலுள்ள ஆடுசதையில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
இரு முறை மருத்துவமனைக்குச் சென்றும், அவரது பிரச்சினை என்ன என்பது கண்டுபிடிக்கப்படாததால், மூன்றே வாரங்களில் உயிரிழந்துவிட்டார் எமிலி.
Credit: Emily Chesterton
ஒரு எச்சரிக்கை செய்தி
அதாவது, எமிலி இரண்டு முறை மருத்துவமனைக்குச் சென்றும், அவருக்கு மருந்துகள் பரிந்துரைத்தது, மருத்துவர்கள் அல்ல.
சமீப காலமாக, பல நாடுகளில் physician associate (PA) என்னும் ஒரு உப மருத்துவப் படிப்பு பிரபலமாகிவருகிறது. இந்த PA என்னும் மருத்துவரின் உதவியாளர்கள், ஏதாவது ஒரு அறிவியல் பட்டப்படிப்புக்குப் பின் இந்த physician associate என்னும் பாடப்பிரிவை இரண்டாண்டுகள் படிக்கிறார்கள்.
ஆனால், மருத்துவர்கள் அப்படியல்ல. ஆறு ஆண்டுகள் மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்து, அதற்குப்பின் இரண்டு ஆண்டுகள் foundation training programme என்னும் படிப்பை அவர்கள் முடிக்கவேண்டும். ஆக இந்த PA என்னும் மருத்துவரின் உதவியாளர்கள், மருத்துவர்கள் ஆகிவிடமுடியாது. அவர்கள் மருத்துவரின் கண்காணிப்பில், மருத்துவருக்கு உதவும் பணிகளில் ஈடுபடலாம்.
Credit: Emily Chesterton
பரிதாபமாக பலியான 30 வயது நடிகை
ஆக, எமிலியை பரிசோதித்தது மருத்துவர்களே அல்ல. இந்த PA என்னும் மருத்துவரின் உதவியாளர்கள்தான் இரண்டு முறையும் அவரை பரிசோதித்து, ஒரு முறை அவருக்கு வலிக்கான பாராசிட்டமால் மாத்திரையும், அடுத்த முறை இதயத்துடிப்பை குறைப்பது போன்ற விடயங்களுக்காக கொடுக்கப்படும் propranolol என்னும் மருந்தையும் கொடுத்துள்ளார்கள்.
இரண்டாவது முறை மருத்துவமனைக்குச் சென்று திரும்பிய எமிலி, அன்று மாலையே நிலைகுலைந்து சரிய, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சில மணி நேரத்துக்குப் பின் உயிரிழந்துவிட்டார்.
அதாவது, எமிலியின் காலிலுள்ள இரத்தக்குழாய் ஒன்றில் ஒரு இரத்தக்கட்டி உருவாகியுள்ளது. அது, நுரையீரலுக்குச் செல்லும் இரத்தக்குழாய் ஒன்றில் சென்று சிக்கியுள்ளது. அதனால் pulmonary embolism என்னும் பிரச்சினை ஏற்பட, எமிலி உயிரிழந்துள்ளார்.
Credit: Lily Barnes
தன் மகளை ஒரு மருத்துவர் பார்த்திருந்தால் அவள் உயிரிழந்திருக்க மாட்டாள் என கண்ணீர் விடும் எமிலியின் தாய், எமிலியை பரிசோதித்தவர்கள் மருத்துவர்கள் அல்ல, அவர்கள் PA என்னும் மருத்துவரின் உதவியாளர்கள்தான் என்பது எமிலுக்குத் தெரியாது, தாங்கள் மருத்துவர்கள் அல்ல என்பதை அவர்களும் கூறவில்லை என்கிறார்.
விடயம் என்னவென்றால், கோவிட் காலகட்டத்தில், மருத்துவர் பற்றாக்குறை காரணமாக இந்த PA என்னும் மருத்துவரின் உதவியாளர்களுக்கு அதிக பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டன. மோசமான தகவல் என்னவென்றால், இன்னும் அவர்களுக்கு பல முக்கிய பொறுப்புக்கள் கொடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது என்பதுதான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |