நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார்
பிரபல தமிழ் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இன்று காலமானார்.
நடிகை மீனா தொண்ணூறுகளில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் அதிகம் தேடப்பட்ட கதாநாயகிகளில் ஒருவர். அவர் 2009-ல் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகரை மணந்தார், இவர்களது மகள் நைனிகா தளபதி விஜய்யின் மகளாக 'தெறி' படத்தில் நடித்துள்ளார்.
கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வித்யாசாகர் காலமானார் என்ற செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது.
அவர் சில வருடங்களாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், புறாவின் கழிவுகளால் பாதிக்கப்பட்ட காற்றை சுவாசிப்பதால் ஏற்பட்ட ஒவ்வாமை எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முழு குடும்பமும் கோவிட்-19 தொற்றுக்கு பாதிப்புக்கு உள்ளானது. அவர்கள் மீண்டு வந்தாலும், வித்யாசாகரின் உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்பு மருத்துவர்கள் வித்யாசாகரின் நுரையீரலை மாற்ற முடிவு செய்ததாகவும், ஆனால் மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடமிருந்து மட்டுமே இது சாத்தியம் என்பதால் நன்கொடையாளரைப் பெறுவதில் சிரமம் இருப்பதாகவும், காத்திருப்பவர்களின் பட்டியல் பெரியதாக இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்பின்னர் மருத்துவர்கள் இந்த நிலையை மருந்துகளால் குணப்படுத்த முயன்றனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இன்று உயிரிழந்தார். தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் மீனா மற்றும் அவரது மகளுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் பதிவு செய்துள்ளனர்.
இறுதிச் சடங்குகள் நாளை (ஜூன் 29 புதன்கிழமை) நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.