விமான விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய நடிகை ரோஜா! நடந்ததை கூறிய கணவர் ஆர்.கே செல்வமணி
நடிகை ரோஜா விமான விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளார்.
பிரபல நடிகை ரோஜா ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி சென்ற விமானம் திடீர் கோளாறு காரணமாக தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விமானத்தை இயக்கிய விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் விமானம் விபத்தில் இருந்து தப்பி உள்ளது.
திருப்பதியில் தரை இறங்க வேண்டிய விமானம் பெங்களூக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பேசிய ரோஜாவின் கணவரான இயக்குனர் ஆர்.கே செல்வமணி,
இந்த சம்பவம் தொடர்பான முழு தகவலும் தற்போது எனக்கு தெரியவில்லை. அவர் விமானம் பெங்களூருவில் தரை இறங்கி உள்ளதாகவும் இன்னும் கதவு திறக்கவில்லை, நான் பின்னர் பேசுகிறேன் என்று சொன்னதாக கூறியுள்ளார்.