அணு ஆற்றல் துறையில் அதானி குழுமம் - புதிய நிறுவனம் தொடக்கம்
டாடா, JSW போன்ற பெரிய தொழில் குழுமங்களுக்குப் பிறகு, அடானி குழுமமும் அணு ஆற்றல் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது.
அஹமதாபாத்தில் தலைமையகத்தைக் கொண்ட அதானி குழுமம், “Adani Atomic Energy” என்ற புதிய நிறுவனத்தை பதிவு செய்துள்ளது. இது, அதானி பவர் (Adani Power) நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனம் ஆகும்.
அதானி பவர் தனது பங்குச் சந்தை அறிக்கையில், “அணு மற்றும் அணு ஆற்றலிலிருந்து மின்சாரம் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் செய்வதே புதிய நிறுவனத்தின் நோக்கம்” என்று தெரிவித்துள்ளது.
இந்திய அரசு அணு ஆற்றல் துறையை தனியார் பங்கேற்புக்கு திறந்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2047-ஆம் ஆண்டுக்குள் அணு ஆற்றல் உற்பத்தி திறனை 100 ஜிகாவாட்டாக (GW) உயர்த்துவதே அரசின் நீண்டகால இலக்கு. தற்போது, அணு ஆற்றல் இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் சுமார் 3 சதவீதம் மட்டுமே வழங்குகிறது. 2047-க்குள் அதை 10 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
“சாந்தி மசோதா” எனப்படும் புதிய சட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களுக்கு அணு ஆற்றல் நிலையங்களை அமைத்து, இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறிய அணு உலைகள் (Small Modular Reactors) கூட தனியார்-அரசு கூட்டாண்மையில் உருவாக்கப்படலாம். மேலும், 49 சதவீதம் வரை வெளிநாட்டு முதலீடு (FDI) அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், யுரேனியம் சுரங்கம், எரிபொருள் மேலாண்மை மற்றும் முக்கிய மூலப்பொருட்கள் (fissile material, heavy water) ஆகியவை அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
இந்த நடவடிக்கை, இந்தியாவின் ஆற்றல் மாற்று திட்டத்தில் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Adani nuclear power entry, Adani Atomic Energy company, India nuclear sector privatization, Shanti bill nuclear reforms, Adani Power nuclear expansion, India nuclear capacity 2047 target, Small modular reactors India, FDI in nuclear power India, Jairam Ramesh Adani criticism, India energy transition nuclear