ஈரான்- இஸ்ரேல் போர்... அதானியின் பில்லியன் டொலர் துறைமுகத்திற்கு ஆபத்தா? CFO விளக்கம்
ஈரான்-இஸ்ரேல் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தில் இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி செய்துள்ள முதலீடு காரணமாக அவருக்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
சேதம் ஏற்பட்டதாக
இந்த வார தொடக்கத்தில் ஈரானிய அணுசக்தி மற்றும் பிற இலக்குகள் மீது அமெரிக்க ஆதரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, சனிக்கிழமை இரவு, ஈரான் அருகிலுள்ள ஹைஃபா துறைமுகத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்புக்கு வந்ததன் பின்னர் அதானி குழுமம் இஸ்ரேலில் பெரிய முதலீடுகளைக் கொண்டுள்ளது, அவற்றில் ஹைஃபா துறைமுகம், Elbit நிறுவனத்துடன் ஒரு பாதுகாப்பு கூட்டு முயற்சி மற்றும் ஒரு semiconductor ஆலை உள்ளிட்டவை அடங்கும்.
இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தில் அதானி 70 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். அவர் 2023 ஆம் ஆண்டில் அதானி துறைமுகங்கள் மூலம் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அல்லது இன்றைய நிலவரப்படி ரூ.10350 கோடிக்கு அதை வாங்கினார்.
தற்போது, இஸ்ரேல்-ஈரான் போருக்கு மத்தியில், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் (APSEZ) பங்குகள் அழுத்தத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளது.
அதானி நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.3.04 லட்சம் கோடி ஆகும். இந்த நிலையில், அதானி எண்டர்பிரைசஸின் குழும தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் ராபி சிங் தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிடுகையில்,
இதுவரை உறுதி செய்யவில்லை
துறைமுகத்திற்கு சேதம் ஏற்பட்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார். முன்னதாக, இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகம் ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலால் சேதமடையவில்லை என்றும், சரக்கு நடவடிக்கைகள் தடையின்றி முன்னேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
மட்டுமின்றி, துறைமுகத்தில் தற்போது எட்டு கப்பல்கள் உள்ளன, சரக்கு நடவடிக்கைகள் இயல்பானவை என்றும் கூறப்படுகிறது. ஈரானிய ஏவுகணைத் தாக்குதலால் துறைமுகத்திற்கோ அல்லது அதன் செயல்பாடுகளுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்றே கூறுகின்றனர்.
ஆனால் இந்தத் தகவல்களை அதானி குழுமம் அல்லது இஸ்ரேல் அரசாங்கம் தரப்பில் இருந்தோ இதுவரை உறுதி செய்யவில்லை.
இஸ்ரேல் போக்குவரத்து அமைச்சகத்துடன் துறைமுகம் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறது மற்றும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் பாதுகாப்பு மற்றும் பிற தேவைகளுக்கு முழுமையாக இணங்கி வழக்கம்போல் தொடர்ந்து செயல்படுகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹைஃபா துறைமுகம் ஒரு முக்கியமான கடல்சார் மையமாக செயல்படுகிறது, இஸ்ரேலின் இறக்குமதியில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக கையாளப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |