அணு ஆற்றல் துறையில் அதானி., புதிய துணை நிறுவனம் தொடக்கம்
அதானி பவர் நிறுவனம், அணு ஆற்றல் துறையில் புதிய துணை நிறுவனத்தை தொடங்கியுள்ளது.
Coastal-Maha Atomic Energy Ltd (CMAEL) எனப்படும் இந்த நிறுவனம், அணு மற்றும் அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தில் ஈடுபடும்.
இந்த CMAEL நிறுவனம், அதானி பவர் நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமான Adani Atomic Energy Ltd (AAEL) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 13, 2026 அன்று நிறுவனம் பதிவு செய்யப்பட்டு, ஏப்ரல் 18 அன்று அதிகாரப்பூர்வ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்திய அரசாங்கம் தனியார் நிறுவனங்களுக்கு அணு ஆற்றல் துறையில் பங்கேற்க அனுமதி அளிக்கும் முயற்சியில் இருக்கும் நிலையில், அதானி பவரின் இந்த நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது.
CMAEL நிறுவனம் ரூ.5 லட்சம் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. 50,000 பங்குகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அணு ஆற்றல் துறையில் அதானி பவரின் இந்த புதிய முயற்சி, இந்தியாவின் ஆற்றல் துறையில் தனியார் பங்கேற்பை அதிகரிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |