ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை வாங்க அதானி மற்றும் டாடா நிறுவனங்கள் ஆர்வம்
இலங்கையின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை வாங்க அதானி குழுமம், டாடா, எமிரேட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதைப்பற்றி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
அதிகாரி கூறியதாவது
''இலங்கை அரசு நஷ்டத்தில் இயக்கி வரும் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனியார்மயமாக்க முடிவுசெய்துள்ளது. நிறுவனத்தின் கணக்குகளை சரிசெய்து அதன் பின் விற்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக பல்வேறு தனியார் மற்றும் விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த அதானி குழுமம்,டாடா நிறுவனம்,துபாயை சேர்ந்த எமிரேட்ஸ் நிறுவனம் போன்றவை இந்நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது.
இலங்கையில் இயல்பு நிலை திரும்பி வருகிறது என்பதை உணர்த்தும் வகையில், இந்தியாவிலிருந்து கடந்த ஏழு மாதங்களில் பயணியர் அதிகளவில் இலங்கை வந்துள்ளனர்.
இதனால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மழைக் காலம் முதல், கொழும்பிலிருந்து திருவனந்தபுரத்துக்கு வாரம் ஆறு முதல் ஏழு விமான சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே, வாரம் 10 முறை கொச்சிக்கு விமான சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில், கோழிக்கோடு பகுதிக்கு விமான சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது'' என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |