பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் இவ்வாறு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்தார்.
மேலும் நவம்பர் 1ஆம் திகதி புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்படவுள்ளதாகவும் அதன்படி, 50 வீதமான மாணவர்களை உள்ளடக்கி பிரத்தியேக வகுப்புகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.