நடிகையுடன் ரகசியமாக குடும்பம் நடத்திய அமைச்சர் மணிகண்டன்? சிக்கியது இப்படித்தான்
பிரபல நடிகையான சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்துவந்த போலீசார் முன்னாள் அமைச்சரான மணிகண்டனை கைது செய்தனர்.
5 வருடமாக தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பான ஆதாரங்களை தன்னுடைய புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர், இதற்கிடையே தனக்கு முன்ஜாமீன் அளிக்க கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 2 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
அப்போது, பெங்களூரில் நண்பர் ஒருவரது பண்ணை வீட்டில் மணிகண்டன் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நேற்றிரவு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், இன்று காலை மணிகண்டனை கைது செய்தனர்.
பின்னர் அவருக்கு ஓட்டல் ஒன்றில் காலை உணவு வாங்கி கொடுத்துவிட்டு, சென்னைக்கு அழைத்து வந்தனர்.
நடிகை சாந்தினி அளித்த புகாரில் கொடுக்கப்பட்டிருந்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின்படி கைது செய்ததாக தெரிகிறது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது ராமநாதபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மணிகண்டன் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பணிபுரிந்தார்.
நடிகை சாந்தினி மலேசிய சுற்றுலா வளர்ச்சி கழக தூதரக கழகத்தில் பணிபுரிந்து வந்தார்.
அப்போதுதான் அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.