துணை முதல்வர் ஓபிஎஸ் பின்னடைவு! அதிமுக கோட்டைகளில் கால் பதிக்கும் திமுக: சரியும் முக்கிய புள்ளிகள்
தமிழகத்தின் துணை முதல்வரான ஒ.பன்னீர் செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், கருணாநிதி மறைவுக்கு பின் என இரண்டு பெரும் தலைகள் இல்லாமல் கடந்த 6-ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
இதனால் இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது,
காலை 10 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும், அதிமுக 60-க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இந்நிலையில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொகுதியான போடிநாயக்கனூர் தொகுதியில் அவரை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார்.
தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 10.35 மணி நிலவரப்படி ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தங்க தமிழ் செல்வன் 6,538 வாக்குகள் பெற்று 124 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
[FBMBJW
இதே போன்று அதிமுகவின் முக்கிய புள்ளிகள் பலரும் தங்களுடைய தொகுதிகளில் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, நான்கு அமைச்சர்கள் பின்னடைவை சந்திக்கின்றனர்.
ராஜபாளையத்தில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 1,900 வாக்குகள் பின்னடைவில் உள்ளார். ராயபுரத்தில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயக்குமார், ஆவடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பாண்டியராஜன், மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பெஞ்சமின் பின்னடைவில் உள்ளனர்.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் டிடிவி தினகரனுக்கும் கடும் போட்டி நிலவி வருவதால்,
அதிமுக கோட்டை என்று கூறப்படும் சில இடங்களில் திமுக கால் பதித்து வருவதாக கூறப்படுகிறது.
]