அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கியது என்ன? வெளியான முழு விபரம்
தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்டுள்ளது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர் நேற்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அரசு டெண்டர் வாங்கித் தருவதாகக் கூறி அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்னிடம் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றிவிட்டதாக கூறியிருந்தார்.
அதோடு, எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்ததது, அதில் குறிப்பாக அவர் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டிப்பட்டிருந்தது.
இது தொடர்பாக எதிர்க்கட்சியாக இருந்த போது திமுகவும் ஆளுநரிடம் புகார் மனு அளித்திருந்தது.
இந்த புகார்களின் அடிப்படையில் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டிய லஞ்ச ஒழிப்பு பொலிசார் கோவை சுகுணாபுரம் பகுதியில் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 52 இடங்களில் காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்றது.
இதில் டெண்டர் ஒதுக்குவதில், ஏராளமான முறைகேடு ஏற்பட்டுள்ளது தெரியவந்ததால், அது தொடர்பான ஏராளமான ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வேலுமணியின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய 60 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கோவையில் 42, சென்னையில் 16 இடங்களிலும், திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது.
11 மணிநேரமாக நடைபெற்ற சோதனை மாலை மணிக்கு முடிவடைந்தது.
எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 13.08 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள், தொழில் நிறுவனங்களின் பரிவர்த்தனை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.