அதிமுகவில் விஸ்வரூபம் எடுத்த ஒற்றை தலைமை விவகாரம்! ஓபிஎஸ்ஸா? இபிஎஸ்ஸா?
அதிமுகவின் பொதுக்குழு தொடங்கவுள்ள நிலையில் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த பொதுக்குழு நடைபெறவுள்ளது. அதிமுக. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குவிந்ததால் வானகரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் உண்டானது.
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க வந்த உறுப்பினர்கள் கையெழுத்திடும் நடைமுறையை பின்பற்றவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுக்குழுவின் முடிவில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் தலைமையை ஏற்பார் என தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கேற்றார் போல ஒற்றை தலைமை வேண்டும் அதுவும் எடப்பாடி பழனிசாமிதான் வேண்டும் என்பதை பொதுக்குழு கூட்டத்தில் முன்வைப்போம் என செயற்குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.