டிடிவி தினகரன் மகள் திருமணம் மூலம் தமிழக அரசியலில் திருப்புமுனை? மீண்டும் வரும் சசிகலா? வெளியான தகவல்
டிடிவி தினகரன் மகள் திருமணம் சசிகலா தலைமையில் நடக்கவுள்ள நிலையில் மீண்டும் சசிகலாவை மையப்படுத்தி அரசியல் நகர்வுகள் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
டிடிவி தினகரன் மகளான ஜெயஹரினிக்கும் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாதனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த நவம்பவரி நடந்து முடிந்துள்ளது.
ஆனால் சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னரே திருமணம் நடக்கும் என்பதில் டிடிவி தினகரன் உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில் வரும் ஜூன் 13-ம் திகதி திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் திருமணத்துக்கு நாள் குறித்திருக்கிறார்கள்.
கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தபோதும் இந்த திருமணத்துக்காக 5 ஆயிரம் பத்திரிகைகளை அச்சடித்திருக்கிறார்களாம்.
இதையே சாக்காக வைத்து அதிமுகவிலுள்ள தங்களது விசுவாசிகள் சிலருக்கும் அழைப்பு அனுப்பும் முடிவில் சசிகலா தரப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தத் திருமண விழாவுக்குப் பிறகு சசிகலாவை மையப்படுத்திய அரசியல் நடவடிக்கைகளும் வேகமெடுக்கும் என கூறப்படுகிறது.
இதன்மூலம் அதிமுக மீண்டும் சசிகலா கையில் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது, எப்படியிருந்தாலும் இதற்கான பதிலை காலம் விரைவில் சொல்லும்!