ஹெட்செட் போட்டபடி ரயில்வே பாதையை கடக்க முயன்ற இளைஞருக்கு நிகழ்ந்த துயரம்!
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் ஹெட்செட் அணிந்தபடி ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர், ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவருடைய 21 வயது மகன் வெங்கடேஷ், நேற்றிரவு ரயில்வே பாதைக்கு அடுத்து இருக்கும் தனது பருத்தி வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.
அப்போது தன்னுடைய போனில் ஹெட்செட் போட்டு பாட்டு கேட்டுக்கொண்டே ரயில்வே பாதையை கடக்க முயன்றுள்ளார். அந்த சமயம் வேகமாக ரயில் ஒன்று வந்துள்ளார். வெங்கடேஷ் காதுகளில் ஹெட்செட் போட்டிருந்ததால் ரயில் வரும் சத்தத்தை அவர் கேட்கவில்லை.
இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதியதில் வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பொலிசார், சம்பவ இடத்திற்கு சென்று இளைஞரின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இளைஞரின் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.