ஜேர்மன் நாட்டவர்களை மீட்பதற்காக ஆப்கானிஸ்தான் சென்ற விமானம்: தரையிறங்காமலே திரும்பியதன் பின்னணி
ஜேர்மன் தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த ஆப்கன் அலுவலர்களை மீட்பதற்காக காபூல் சென்ற விமானம் ஒன்று, அங்கு தரையிறங்காமலே திரும்பியது.
நேற்று மாலை தன் நாட்டு மக்களை ஏற்றிக்கொண்டு வருவதற்காக ஜேர்மன் போர் விமானம் ஒன்று காபூலுக்கு சென்றுள்ளது. ஆனால், அங்கு ஓடு பாதை முழுவதும் பொதுமக்கள் நிறைந்திருந்ததால், தரையிறங்க முடியாத அந்த விமானம் உஸ்பெகிஸ்தான் தலைநகர் Tashkentக்கு சென்று இறங்கியுள்ளது.
அதைத் தொடர்ந்து மற்றொரு விமானம் காபூலுக்கு அனுப்பப்பட இருப்பதாக ஜேர்மன் விமானப்படை தெரிவித்துள்ளது.
மக்கள் ஓடு பாதைகளில் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருப்பதால், இப்போதைக்கு அங்கு விமானங்கள் இறங்குவதற்கு வாய்ப்பில்லை என ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.