ஜேர்மனியில் பீட்சா விற்கும் முன்னாள் ஆப்கன் அமைச்சர்: அதிரவைத்த ஒரு காட்சி
முன்னாள் ஆப்கன் அமைச்சர் ஒருவர் ஜேர்மனியில் பீட்சா டெலிவரி செய்யும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் Syed Ahmed Sadat.
2020 இறுதியில் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜேர்மனியை வந்தடைந்தார் அவர்.
தற்போது, ஒரு டெலிவரி பாயாக பீட்சா டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகிறார் Sadat.
ஜேர்மனியின் Leipzig நகரில், அவர் சீருடை அணிந்து, சைக்கிள் ஒன்றில் பீட்சா டெலிவரி செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
Syed Ahmed Sadat, the former Afghan Minister of Communications and Technology, has taken up the profession of delivering food orders on a bicycle in Leipzig, Germany, where he arrived at the end of 2020 after resigning from his position. https://t.co/CtaFvRSTBa
— MyWorld (@kingofSomaliaa) August 24, 2021
ஒரு நாட்டின் முன்னாள் அமைச்சர் ஒருவர் மற்றொரு நாட்டில் உணவு டெலிவரி செய்யும் நிலைக்கு ஏன் ஆளானார், இந்த காட்சியில் எந்த அளவு உண்மைத்தன்மை உள்ளது என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.
என்றாலும், ஆப்கானிஸ்தானிலிருந்து பல அரசியல்வாதிகள் பணத்தை சுருட்டிக்கொண்டு நாட்டை விட்டு ஓடிவிட்ட நிலையில், நேர்மையாக பணிபுரியும் Sadatக்கு சமூக ஊடகங்களில் மக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
#AfghanistanCrisis | Former #Afghan Minister of Communications Syed Ahmad Shah Sadat currently living as a delivery boy in Leipzig, Germany. pic.twitter.com/OR7uema5nu
— Asianet Newsable (@AsianetNewsEN) August 22, 2021