வறுமையின் காரணமாக சிறுநீரகங்களை விற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்!
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு ஏற்பட்டுள்ள வறுமை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றின் விளைவாக மக்கள் தங்கள் சிறுநீரகம் மற்றும் உடல் பாகங்களை விற்று வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு, தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
இதனை பல்வேறு நாடுகளும் அங்கீகரிக்காத நிலையில், அமெரிக்கா, பிரித்தானிய மற்றும் உலக வங்கி ஆகியவை சர்வதேச நிதிகளை ஆப்கானிஸ்தான் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
இதன்விளைவாக ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள வேலையின்மை, பசி, பட்டினி போன்ற பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் தங்கள் சிறுநீரகம் மற்றும் உடல் உறுப்புகளை விற்றுவருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் உடல் உறுப்புகளை விற்பது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்கள் உடல் உறுப்புகளை கள்ள சந்தைகளில் விற்று வருகின்றனர்.
இந்த நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொருளாதார வல்லுநர்கள், உலக வங்கி ஆப்கானிஸ்தானின் சர்வதேச நிதிகளை விடுவிப்பதே இதற்கான ஒரு நல்ல தீர்வாக அமையும் என தெரிவித்துள்ளார்.