மூக்கை நுழைக்காதே... ஜேர்மனியில் பிரபல நாட்டிற்கு எதிராக ஆப்கானியர்கள் செய்த செயல்! இணையத்தில் வெளியான வீடியோ
ஜேர்மனியில் வாழும் ஆப்கானியர்கள், பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜேர்மனியின் Frankfurt-ல் இந்த போராட்டம் நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதற்கு எதிராக ஜேர்மனியின் Frankfurt வசிக்கும் ஆப்கானியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆப்கானிஸ்தான் கொடியுடன் Frankfurt சாலைகளில் திரண்ட ஆப்கானியர்கள், பாகிஸ்தான் ஒழிக என கோஷமிட்டனர்.
பின் பாகிஸ்தான் கொடியை தரையில் போட்டு ஷூ கால்களால் மிதித்தும், கொடியை தீ வைத்து எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
معترضان در آلمان با شعار «مرگ بر پاکستان» بیرق این کشور را آتش زدند
— Aamaj News (@AamajN) September 12, 2021
شماری از افغانهای ساکن در شهر فرانکفورت آلمان در اعتراض به «مداخلهی پاکستان در امور افغانستان» با شعار «مرگ بر پاکستان» پرچم این کشور را آتش زدند.#آماج_نیوز pic.twitter.com/yLW8uY6oSI
சமீபத்தில் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன் கூடிய ஆப்கானியர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பாகிஸ்தான் உள்நாட்டு புலனாய்வுத்துறை (ISI) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் காபூலுக்கு வருகை தந்ததை தொடர்ந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவரை நிறுத்த வேண்டும் என காபூலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அழைப்பு விடுத்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.