கொரோனா பாதிப்புக்கு பின் வரும் உடல்நலப் பிரச்சனைகள்! எச்சரிக்கும் WHO
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின், ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள் கவலையளிக்கும் வகையில் உள்ளதாக, சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவில் இருந்து தப்பிக்க இன்னும் எந்த ஒரு முழுமையான தீர்வும் இல்லை.
ஆனால், தற்போதைக்கு தடுப்பூசி மட்டுமே நமக்கு கிடைத்துள்ள ஆறுதலான தகவல்.
இந்நிலையில், கொரோனாவில் பாதிக்கப்பட்டு, அதன் பின் அதில் இருந்து மீண்ட பின் பல உடல்நலப் பிரச்சனைகள் உள்ளதாக உலகசுகாதார அமைப்பு கூறியுள்ளது. இது குறித்து, உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், உலகம் முழுவகும் 20 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது தொற்றில் இருந்து மீண்ட பிறகு எழும் உடல் நில பிரச்னைகளால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறித்த விவரங்கள் எங்களிடம் இல்லை.
ஆனால் தொற்றிலிருந்து மீண்ட பிறகு எழும் உடல்நல பிரச்னைகள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. நீண்ட நாள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றிலிருந்து மீண்ட பிறகு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதனால் அவர்கள் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ள வேண்டும். எவ்வளவு நாட்கள் வரை இப்பிரச்னைகள் தொடரும் என்பது எங்களுக்கு தெரியாது.
இதனால் இது குறித்து புரிந்து கொள்ள, ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.