சாப்பிட்ட பின்பு நாம் செய்யும் சின்ன... சின்ன தவறுகள் ! இனிமேல் இதை எல்லாம் செய்யாதீங்க
தற்போது இருக்கும் இந்த பரபரப்பான உலகில் பல விஷயங்கள் மாறிப் போய்விட்டது என்று சொல்லலாம்.
முன்பெல்லாம் எது எல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லிவந்தார்களோ, அதில் பல விஷயங்களை நாம் அதை இன்று ஒரு வித ஸ்டைல் என்று சொல்லிக் கொண்டு செய்து வருகிறோம். குறிப்பாக உணவு முறைகளை சொல்லலாம், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி உண்டு.
ஆனால், இப்போது அப்படியா? வயிறு நிறைய சாப்பிட்டுவிடுவது அதன் பின் அதை எப்படி ஜீரணிக்க வைப்பது? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தேடிக் கொண்டிருப்பது. முறையாக சாப்பிட்டால், நமக்கும் நலம், நம் உடல் நலமும் சீராக இருக்கும்.
அப்படி நாம் சாப்பிட்ட பின் செய்யக் கூடாத சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம்
- சாப்பிட்டவுடன், பலர் செய்யும் தவறு தூக்கம், சாப்பிட்ட பின்பு ஒரு பத்து நிமிடங்கள் வேகமாக நடக்காமல் சாதரணமாக நடந்து கொண்டோ அல்ல்து உட்கார்ந்தோ இருக்கலாம்.
- அதே போன்று சாப்பிட்ட பின்பு சிகரெட் பிடிப்பது, நீங்கள் 10 சிகரெட் பிடிப்பதற்கு சமம் முக்கியமாக சாப்பிட்ட உடனே குளிக்கக்கூடாது, சாப்பிட்ட பின்பு உடனே குளித்தால் செரிமான மண்டலம் பலவீனமாகி, செரிமான செயல்முறையில் இடையூறு ஏற்பட்டு, அதனால் உடல்நிலை சரியில்லாமல் போகும் நிலை வரலாம். உணவு உண்ட உடனேயே உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- எப்போதுமே நம்மில் பலர் சாப்பிட்ட பின்பு தான் பழங்களை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன, அப்படி இல்லாமல் சாப்பிடுவதற்கு ஒரு பத்து நிமிடம் முன்பு ஏதேனும் பழங்கள் சாப்பிட்டுவிட்டு சாப்பிட்டால், அது மிகவும் உடல் நலத்திற்கு நல்லது. அப்படி சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
- சாப்பிட்ட பின்பு குளிர்ந்த நீரை குடிப்பதை விட, சுடு தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. சுடு தண்ணீர் குடிப்பதன் மூலம், உணவு எளிதில் செரிமானமாவதோடு, உணவில் உள்ள சத்துக்களும் எளிமையாக உடலால் உறிஞ்சப்படும்.
- சாப்பிட்ட பின்பு எத்தனை மணி நேரம் கழித்து தூங்கலாம் என்றால் ஒரு மணி நேரத்திற்கு பின் தூங்குவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.